Home One Line P2 சாங்கி விமான நிலையத்தில் அதிகாலையில் விமான நடவடிக்கைகள் தடைபட்டன!

சாங்கி விமான நிலையத்தில் அதிகாலையில் விமான நடவடிக்கைகள் தடைபட்டன!

616
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சாங்கி விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்தில் இருந்து பணியாளர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டதால், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 12.10 மணிக்கு விமான நடவடிக்கைகள் தடைப்பட்டன.

சிங்கப்பூர் விமான போக்குவரத்து ஆணையம் (சிஏஏஎஸ்) கூற்றுபடி, தீயணைப்பு முறை செயல்படுத்தப்பட்டதால் கோபுரத்திலிருந்தவர்களை வெளியேற்ற வேண்டியிருந்ததாகக் கூறியது.

அதிகாலை 1.40 மணிக்கு சாங்கி கட்டுபாட்டு கோபுரம் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கியதாகவும், விமான நடவடிக்கைகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டதாகவும் சிஏஏஎஸ் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இடைக்காலத்தில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு சேவைகள் காப்புப் பிரதி தளத்திலிருந்து வழங்கப்பட்டன,” என்று சிஏஏஎஸ் தனது முகநூல் பக்கத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில், 50 புறப்படும் விமானங்கள் 30 நிமிடங்கள் தாமதமாகிவிட்டதாகவும், ஒன்பது விமானங்கள் திருப்பி விடப்பட்டதாகவும் சிஏஏஎஸ் தெரிவித்துள்ளது.

நெருப்பு ஏதும் ஏற்படவில்லை. தீயணைப்பு முறை செயல்படுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, ”என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.