Home கலை உலகம் பிரபல பாடகர் டி.எம்.எஸ்.சௌந்தரராஜன் காலமானார்.

பிரபல பாடகர் டி.எம்.எஸ்.சௌந்தரராஜன் காலமானார்.

813
0
SHARE
Ad

TMSசென்னை, மே 25 – கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மயக்கும் குரலால் தமிழ் மக்களை கட்டிப் போட்டு வைத்திருந்த பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார்.

#TamilSchoolmychoice

அவருக்கு வயது 91. உடல்நல குறைவு காரணமாக கடந்த 12-ந்தேதி ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 19-ந்தேதி வீடு திரும்பினார். மூச்சுக்கோளாறுக்கு வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மீனாட்சி அய்யங்காரின் மகனாக மதுரையில்பிறந்த டி.எம். சவுந்தரராஜன், பிரபல இசை வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாசஅய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் இசை பயிற்சி பெற்று பலஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார்.

1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் ராதே உனக்கு கோபம் ஆகாதடிஎன்றபாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமான டி.எம். சவுந்தரராஜன் தனதுகம்பீர குரலின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தார்.

2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் எனஅனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன்ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார்.

எந்த நடிகருக்காக பாடினாரோ, அந்த நடிகரின் முகத்தையும், பாவனைகளையும் பாடலைக் கேட்கின்ற மக்களின் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்ற  ஆற்றலைக் கொண்டிருந்தவர் டிஎம்எஸ்.

வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமிய ரசம்உட்பட அனைத்து நவரசங்களையும் உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன் இன்றையசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உள்ளிட்டநட்சத்திரங்களுக்காகவும் பாடியுள்ளார்.

குறிப்பாக, எம்.ஜி.ஆரின் சினிமா வளர்ச்சிக்கும், பின்னர் அவரது அரசியல் வளர்ச்சிக்கும் அவருக்காக டிஎம்எஸ் பாடிய பாடல்கள்தான் பாதை அமைத்துக் கொடுத்தன என்பதை தமிழ் மக்கள் என்றைக்கும் ஒப்புக் கொள்வார்கள்.

2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலக செம்மொழி மாநாட்டுக்காகஉருவான செம்மொழியான தமிழ் மொழியாம்என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன்குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில்பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பல்வேறுகலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்திவருகின்றனர்.