Home உலகம் சோமாலியா ஐ.நா. தாக்குதலில் 22 பேர் மரணம்!

சோமாலியா ஐ.நா. தாக்குதலில் 22 பேர் மரணம்!

439
0
SHARE
Ad

Somalia-Mogadishu-sliderமொகாடிசு, ஜூன் 20 – சோமாலியா தலைநகரில் உள்ள முக்கிய ஐக்கிய நாட்டு சபை (ஐ.நா) மையம் மீது போராளிகள் நடத்திய தாக்குதலில் 22 நபர்கள் பலியாகியுள்ளனர்.

#TamilSchoolmychoice

சோமாலியாநாட்டின் தலைநகரான மொகாடிசுவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் முன்னேற்றதிட்ட மையத்தில் நேற்று காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது.குண்டு வெடித்ததால் ஏற்பட்ட பரபரப்பை பயன்படுத்தி ஆயுதமேந்திய போராளிகள்ஐ.நா மையத்தின் உள்ளே நுழைந்தனர்.

ஐ.நாமையத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதிபடைக்கும் போராளிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி மோதலில் 22 நபர்கள்பலியாகினர். பலியானோரில் 4 ஐ.நா பாதுகாப்பு படையினர் மற்றும் 4 உள்ளூர்பாதுகாப்பு படையினர் அடங்குவர்.

இத்தாக்குதலைவன்மையாக கண்டிப்பதாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிவித்துள்ளநிலையில் அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட சக்தியானஐ.நாவை விரட்டும் வரை இது போன்ற தாக்குதல் தொடரும் என இத்தாக்குதலைநடத்திய அல் சபாப் என்ற போராளிகள் அமைப்பு அறிவித்துள்ளது.