Home இந்தியா முன்னாள் அமைச்சர் மகன் திடீர் கைது!

முன்னாள் அமைச்சர் மகன் திடீர் கைது!

485
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 7- முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மகன் இளம்சுருதி நேற்று திடீரென கைது செய்யப் பட்டுள்ளார்.

jeyalalithaஇளம்சுருதி முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக, அவர் மீது அச்சுறுத்தல், கொலைமிரட்டல், நற்பெயருக்கு, களங்கம் ஏற்படுத்துதல் என்பன உட்பட 6 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப் பட்ட இளம்சுருதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக் கப்பட்டார்.

#TamilSchoolmychoice

பரிதி இளம்வழுதி கடந்த வாரத்தில் திமுகவில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத் தக்கது.