Home வணிகம்/தொழில் நுட்பம் மும்பைக்கு பறக்க மலிண்டோவுக்கு அனுமதி

மும்பைக்கு பறக்க மலிண்டோவுக்கு அனுமதி

656
0
SHARE
Ad

புதுடில்லி ஜூலை 19-  மும்பை மற்றும் தென்னிந்திய  இலக்குகளுக்கு விமானச் சேவையை மேற்கொள்ள  மலிண்டோ எர்க்கு அனுமதி கிடைத்துள்ளதாக  மலிண்டோ அறிக்கை தெரிவிக்கிறது.

Malindo-Air-featureமலிண்டோ ஏர் கோலாலம்பூர்  புதுடில்லி பயணத்தை  விரைவில் மேற்கொள்ளுமென்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

கோலாலம்பூர் புதுடில்லி பயணத்துக்கு  மலிண்டோ ஏர்  ( போயிங் 737990 இஆர் ) விமானத்தை பயன்படுத்தும்.

#TamilSchoolmychoice

மேலும், 15 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டுச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. உணவு வழங்கப்படும்.

இந்த விமான சேவை கோல்கத்தா, திருவனந்தபுரம் சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும்  என்று ஏர் ஓட்டம் டிராவல்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜேற்குர அரிவாலா கூறியதை மேற்கொள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இந்தியாவிலிருந்து 780, 000 சுற்றுலா பயணிகள்  மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.