Home நாடு சிறுகதை நூல் வெளியீட்டு விழா

சிறுகதை நூல் வெளியீட்டு விழா

714
0
SHARE
Ad

oms-thiyagarajanகிள்ளான், பிப்.7- கிள்ளான் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலய நிர்வாகத்தினர் கிள்ளான் மாவட்ட எழுத்தாளர் வாசகர் இயக்கத்தினர் ஷா ஆலம் தமிழர் சங்கம் ஆகிய இயக்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எழுத்தாளர் பொன். சசிதரனின் தீர்த்தக்கரையும் திரைக்கடலோடியும் எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு இம்மாதம் வரும் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு கிள்ளான் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஆலயத் தலைவர் திருப்பணி சேவாரத்னம், சங்கபூஷன் சித. ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் நூல் வெளியீட்டை செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் ப.தியாகராஜன் (படம்) ஏற்று நடத்தும் இந்நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு சிறப்பு வருகையாளர்களாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, சிலாங்கூர் மாநில போலிஸ் துணை ஆணையர் டத்தோ. ஆ தெய்வீகன், இயற்கை மருத்துவப் பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன், தொழிலதிபர் கிளாசிக் சுப்பையா உட்பட மேலும் சில பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள்.

சுற்றுவட்டார பெருமக்களும் எழுத்தாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் திரளாக வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.