Home நிகழ்வுகள் சுங்கைச் சீடு மாரியம்மன் ஆலய சமயச் சொற்பொழிவு

சுங்கைச் சீடு மாரியம்மன் ஆலய சமயச் சொற்பொழிவு

567
0
SHARE
Ad

tharmalingam-2கோலலங்காட், பிப்.7- கோலலங்காட் மாவட்ட மன்ற உறுப்பினர் பிரிவு ஏற்பாட்டில் சுங்கை சீடு தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய ஆதரவுடன் 22.2.2013 வெள்ளிக்கிழமை இரவு 8.01 மணிக்கு ஆலய மண்டபத்தில் சமயச் சொற்பொழிவு நடைபெறும்.

திருமுறைச் செம்மல் சைவ சித்தாந்த இரத்தினம் ந. தர்மலிங்கம் வழங்கும் சமயச் சொற்பொழிவு சிறப்பு அங்கமாக இடம்பெறும்.

எனவே, சுற்றுவட்டார மெய்யன்பர்களும் ஆர்வலர்களும் திரளாக வருகை தந்து சொல்லின்பம் பருகுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.