Home நாடு ஒரே மலேசியா உதவித் தொகை மார்ச் 15 வரை நீட்டிப்பு

ஒரே மலேசியா உதவித் தொகை மார்ச் 15 வரை நீட்டிப்பு

520
0
SHARE
Ad

indexபுத்ராஜெயா,பிப்.7-  3,000 வெள்ளிக்கு குறைவான வருவாய் பெறுபவர்களுக்கு அரசாங்கம் ஒரே மலேசியா உதவித் தொகை கடந்தாண்டு வழங்கியது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக அந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதற்கான விண்ணப்பங்களை மார்ச் 15ஆம் தேதி வரை அரசாங்கம் நீடித்துள்ளதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ சி அமாட் ஹுஸ்னி (படம்) தெரிவித்தார்.

தகுதியுடைய அனைவரும் இந்நிதியை பெற வேண்டும் என்பதே அரசாங்கம் நோக்கம் என்று விளக்கமளித்த அவர், இது வரை 73 லட்சம் பேர் ஒரே மலேசியா உதவித்திட்டத்திற்கு விண்ணப்பித்து இருக்கின்றனர் என்றும் அவர் சொன்னார்.

#TamilSchoolmychoice

ஒரு சிலர் இரு முறை விண்ணப்பம் செய்திருப்பதாகவும், உதவித்தொகைப் பெற தகுதியானவர்கள் யாராக இருந்தாலும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஒரு விண்ணப்பத்திற்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும் என்றார்.