Home இந்தியா உத்தரகாண்ட் பேரழிவில் 4120 பேர் மாயம்: தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரை காணவில்லை

உத்தரகாண்ட் பேரழிவில் 4120 பேர் மாயம்: தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரை காணவில்லை

455
0
SHARE
Ad

டேராடூன், செப். 18- உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் பலத்த மழை காரணமாக, கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.

Uttarakhand-Floods-Helpline-Numberஇதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். கேதார்நாத் யாத்திரை சென்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

மீட்கப்பட்ட உடல்கள் தவிர மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதேசமயம் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

தற்போது மீட்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி 92 வெளிநாட்டினர் உட்பட 4,120 பேர் காணாமல் போயிருப்பதாக அரசு இறுதிப் பட்டியல் வெளியிட்டுள்ளது.

uttarakhand_1_30062013அவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்காததால் அவர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியலில் அதிகம் பேர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்தான். அந்த மாநிலத்தைச் சேர்ந்த 1150 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரைக் காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பாலானவர்களின் உறவினர்கள், காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.