Home இந்தியா தேர்தலுக்கு பின் அதிமுவுடன் கூட்டணி என்பது வெறும் வதந்தி – வெங்கையா நாயுடு!

தேர்தலுக்கு பின் அதிமுவுடன் கூட்டணி என்பது வெறும் வதந்தி – வெங்கையா நாயுடு!

799
0
SHARE
Ad

venkaiyaசென்னை, மார்ச் 31 – தேர்தலுக்கு பின்னர் பாஜவுடன், அதிமுக கூட்டணி அமைக்கும் என்பது வெறும் வதந்திதான் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,காங்கிரசுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு விட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தில் பாஜவையோ, குறிப்பாக நரேந்திர மோடியை பற்றியோ விமர்சனம் செய்யாமல் பிரசாரம் மேற்கொள்வதால்,

#TamilSchoolmychoice

தேர்தலுக்கு பின் பாஜக,வோடு அதிமுக கூட்டு சேர்ந்துவிடும் என பரவலாக பேசப்படுகிறதே என நிருபர்கள் கேட்டதற்கு, அது வெறும் வதந்தி தான். அதில் உண்மை எதுவும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு பேசினார்.