Home இந்தியா தேர்தல் தோல்வி குறித்து பின்னர் ஆராய்வோம் – மு.க.ஸ்டாலின்

தேர்தல் தோல்வி குறித்து பின்னர் ஆராய்வோம் – மு.க.ஸ்டாலின்

577
0
SHARE
Ad

stalinசென்னை, மே 17 – நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இந்தத் தோல்வியை அந்ததந்தமாவட்டங்களில் கட்சியின் பொறுப்பாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப் போவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இத்தேர்தல் குறித்து கருத்துரைத்த ஸ்டாலின், இந்த வெற்றியில் மக்களுக்கு மகிழ்ச்சி என்றால், எங்களுக்கும் மகிழ்ச்சி தான். ‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று கருணாநிதி கூறியதை, நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

இதனிடையே, இவ்வாறு தோல்வியடைந்ததை என்ன நடந்தது என்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள கட்சியினரிடம் தீவிரமாக ஆராய்வோம் என்று இது ஒரு பாடமாக எடுத்துக் கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பா.ஜ.,வுக்கும், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து, பின்னர் ஆராய்வோம்.