Home கலை உலகம் சூர்யா-வெங்கட்பிரபு இணையும் புதிய படம் பூச்சாண்டி?

சூர்யா-வெங்கட்பிரபு இணையும் புதிய படம் பூச்சாண்டி?

618
0
SHARE
Ad

surya,venketசென்னை, ஜூன் 13 – நடிகர் சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ‘அஞ்சான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு பிறகு சூர்யா, வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான பூஜை ஏற்கெனவே போடப்பட்டுள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா அல்லது எமி ஜாக்சன் இரண்டு பேரில் ஒருவரை நடிக்க வைக்க தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ‘பூச்சாண்டி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.