Home நிகழ்வுகள் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தாய்மொழி தின விழா

மலாயாப் பல்கலைக்கழகத்தில் தாய்மொழி தின விழா

884
0
SHARE
Ad

umகோலாலம்பூர், பிப்.19-  எதிர்வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி உலகத் தாய்மொழி தினமாக  ஐக்கிய நாட்டு சபையினரால் கொண்டாடப்படுகின்றது.

இந்நாளை மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அறவாரியம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.

இவ்வருடம் தமிழ் அறவாரியம் மலாயாப் பல்கலைகழகம், சீன மொழி இயக்கங்களுடன் சேர்ந்து தாய்மொழி தினத்தை சிறப்பாகக் கொண்டாடவுள்ளது.

#TamilSchoolmychoice

வரும் 21-ஆம் தேதி பிப்ரவரி  2013 வியாழக்கிழமை  மாலை 6.30 மணி தொடங்கி இரவு 10 மணி வரை மலாயாப் பல்கலைகழக டேவான் கூளியா அங்சனாவில் கொண்டாடவுள்ளது.

மேல் விவரங்களுக்கு, குமாரி உஷாவுடன்  012-3833677 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.