Home உலகம் இஸ்ரேல் தரைவழி தாக்குதலில் 40 பேர் பலி! சண்டை நிறுத்தம் செய்ய தீவிர முயற்சி!

இஸ்ரேல் தரைவழி தாக்குதலில் 40 பேர் பலி! சண்டை நிறுத்தம் செய்ய தீவிர முயற்சி!

518
0
SHARE
Ad

balatinum 655dகாஸா, ஜூலை 21 – காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தரைவழி தாக்குதல்களில் 40 பாலஸ்தீனர்கள் பலியாயினர். இதற்கிடையே இஸ்ரேல் அரசு சண்டை நிறுத்தம் செய்ய தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இஸ்ரேலுக்கும், காஸா முனையை ஆட்சி செய்துவரும் பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையேயான சண்டை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துவருகிறது.

கடந்த 8–ம் தேதி தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் காஸா முனை மீது இஸ்ரேல் போர் விமானங்கள் சளைக்காமல் குண்டு மழை பொழிந்து வந்தன.

#TamilSchoolmychoice

ஆனாலும் இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்தி வருகிற ராக்கெட் வீச்சை நிறுத்த முடியவில்லை. இதன்காரணமாக இதுவரை கடல் மற்றும் வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், தரை வழி தாக்குதலையும் நடத்தி வருகிறது.

Boko-Haram-bombing1இஸ்ரேலின் குண்டு வீச்சில் தொடர்ந்து அப்பாவி பாலஸ்தீன மக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பலியாகி வருவது சர்வதேச சமூகத்துக்கு மிகுந்த கவலையை அளித்து வருகிறது.

இரு தரப்பிலும் போர் நிறுத்துவதற்கான ராஜ்ய ரீதியிலான முயற்சியை எகிப்து, பிரான்ஸ், ஐ.நா.சபை ஆகியவை மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், காஸாமுனையின் வட கிழக்கு பகுதியில் உள்ள ஷெஜையா, ஜெய்தூன், ஜபாலியா பகுதிகளில் நேற்று காலையில் இஸ்ரேல் தரைவழி தாக்குதல்களை நடத்தியது. இதில் 40 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

பலியானவர்களில் ஹமாஸ் தலைவர் ஒருவரின் மகனும் அடங்குவார். ஷெஜையாவில் தெருக்களில் மனித உடல்கள் இறைந்து கிடந்ததாக நேரில் கண்டவர்கள் கூறினர்.

Smoke and fire from an Israeli bomb rises into the air ove Gaza Cityபடுகாயமடைந்தவர்கள் காஸா நகரில் உள்ள ஷீபா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை மோசமாக உள்ளதாக உள்ளூர்வாசி ஒருவர் ரெயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கூறினார்.

நேற்று மதிய நிலவரப்படி இந்தப் போரில் இதுவரை 389 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 62 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சண்டையில் ஒரே நாளில் அதிகபட்ச உயிர்ப்பலி இதுதான். இஸ்ரேல் தரப்பில் 7 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். 61 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.