Home இந்தியா கேரளாவில் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல் – முதல்வர் உம்மன் சாண்டி!

கேரளாவில் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல் – முதல்வர் உம்மன் சாண்டி!

527
0
SHARE
Ad

oommen-chandy_71திருவனந்தபுரம், ஆகஸ்ட் 26 – கேரளாவில் நேற்று இரவு முதல் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டன. இதனால் நேற்று பகல் முழுவதும் சலுகை விலையில் மதுபானங்ககளை விற்றுத் தீர்த்தனர் உரிமையாளர்கள்.

கேரள மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த, அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 418 மதுபான கடைகளை மூட உத்தரவிட்டார்.

அதன் பின்னர் 312 மதுக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது இயங்கி வரும் 312 மதுபான கடைகளையும் நேற்று இரவு 10 மணி முதல் மூட முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டன.

#TamilSchoolmychoice

karalaமேலும், ஓணம் பண்டிகை விரைவில் கேரளாவில் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு மதுபானகளிலும் மதுபான வகைகள் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கடைகளை மூட முதல்வர் உத்தரவிட்டதையடுத்து, தங்களிடம் உள்ள மதுவை விற்பனை செய்வதில் உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதன்படி, கடைசி நாளன்று ஒரு மதுபான பாட்டில் வாங்கினால், 3 மதுபான பாட்டில் இலவசம் எனவும், ஒரு பீர் வாங்கினால், இன்னொரு பீர் இலவசம் எனவும் அறிவித்திருந்தனர்.

Closed Barஇதனால் கேரளாவிலுள்ள 312 மதுபானக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. வருகிற 1-ஆம் தேதி முதல் 30 அரசு மதுபானக் கடைகளையும் மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, மதுக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் கொச்சியில் நடந்தது.

இதில், அரசின் திடீர் உத்தரவால் தங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மதுக் கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.