Home இந்தியா தமிழ் சினிமா உலகிற்கு ஜாக்கிசானும், அர்னால்டும் கற்றுக்கொடுத்த பாடங்கள்!

தமிழ் சினிமா உலகிற்கு ஜாக்கிசானும், அர்னால்டும் கற்றுக்கொடுத்த பாடங்கள்!

1111
0
SHARE
Ad

jakijanசென்னை, செப்டம்பர் 19 – ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவை சாதாரணமாக திரையரங்குகளில் நடக்கும். பிரம்மாண்ட தயாரிப்பாளர், பிரம்மாண்ட இயக்குநர் என்றால், வசதிக்கு ஏற்ப தனி விமானத்தில் சென்றோ, அல்லது நேரு உள் விளையாட்டரங்கத்திலோ நடத்தி அசத்துவார்கள்.

சிறப்பு விருந்தினராக பாலிவுட், ஹாலிவுட் நடிகர்களை வரவழைத்து அமர்களப்படுத்துவார்கள். பாலிவுட், ஹாலிவுட் நடிகர்களும் தமிழ் புரியாவிட்டாலும் ரசிகர்கள் சிரிக்கும் போது சிரித்து, கை தட்டும் போது கை தட்டி மகிழ்ந்து இசையை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு செய்துவிட்டு போவார்கள்.

ஆனால் சில திரைப்பட விழாக்களில் சிறப்பு விருந்தினர்களால் ஏற்படும் சிறு சிறு சம்பவங்கள் கூட காலம் கடந்து பேசக்கூடியதாக மாறிவிடுகிறது.

#TamilSchoolmychoice

dasavatharam-0060ஹாலிவுட் நடிகர்களான ஜாக்கி சான் மற்றும் அர்னால்டு இருவருமே ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்த திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த ‘தசாவதாரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற போது, அந்த விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தி நடிகர் அமிதாப் பச்சன், கமல், மலையாள நடிகர் மம்மூட்டி, விஜய், மல்லிகா ஷெராவத் ஆகியரோடு ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் கலந்து கொண்டு இசை தட்டை வெளியிட்டார்.

இசை வெளியீட்டு விழா மேடையில் இசை தட்டில் சுற்றப்பட்டிருந்த பேப்பரை கிழித்து அப்படியே மேடையிலேயே போட்டு விட்டார்கள். யாருமே அதைக் கண்டு கொள்ளாமல் புகைப்படம் மற்றும் காணொளிக்கு காட்சியளிக்க ஆரம்பித்தனர்.

dasavatharam-0081ஆனால் ஜாக்கிசான் அந்தக் குப்பைகளைப் பொறுக்கி எடுத்து அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போடுவதற்கு நடந்து சென்றார். உடனே சுற்றிருந்த நடிகர்கள் சுதாரித்து அவரிடம் இருந்த பேப்பரை வாங்கி உதவியாளர் ஒருவரிடம் கொடுத்தனர்.

பிறகு, ஜாக்கிசான் இசையை வெளியீட்டார். இருந்தாலும் குப்பைப் பேப்பரை வாங்கிச் சென்ற அந்த உதவியாளர் சரியாக குப்பைத் தொட்டியில் போடுகிறாரா என்பதைப் பார்த்து கொண்டே இருந்தார்.

‘தசாவதாரம்’ இசை வெளியீட்டு விழாவில் இது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டது. ஊடகங்களிலும், யுடுயூப், சமூக வலைத்தளங்களிலும் இப்போதும் பகிரப்படுகிறது.

இதேபோல ஆஸ்கார் ரவிச்சந்திரன் படமான ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, தமிழ் சினிமா உலகிற்கு குறிப்பிடத்தக்க பாடம் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதுதான் நேரம் தவறாமையின் அவசியம்.

‘ஐ’ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க பிற்பகல் 3:30 மணியில் இருந்து 5:30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்று அனுமதிச்சீட்டில் போடப்பட்டு இருந்தது. ஆனால், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது மணி 7:30-யைத் தாண்டிவிட்டது.

i Movie launch Rajni - Shankar Arnoldநிகழ்ச்சியை உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்த அர்னால்டு முன்பு பாடி பில்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. பாடி பில்டர்கள் அர்னால்டுக்கு மரியாதை செய்தார்கள். அப்போது, அவர்களோடு இணைந்து மேடையேறிய அர்னால்டு, தனது பேச்சைத் தொடங்கி முடித்து அரங்கினை விட்டு வெளியேறினார்.

இசையை வெளியிடுவதற்கு முன்பே அர்னால்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது, விழா ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘ஐ’ படத்தின் இசை வெளியீடு விழா சிறப்பு விருந்தினர் இன்றி, ரஜினி இசையை வெளியிட புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்.

i Movie audio launch group photoஅந்த இசை வெளியீட்டின்போது கூட படத்தின் நாயகன் விக்ரமும், நாயகி ஏமி ஜாக்சனும் அங்கு இல்லை. ‘தசாவதாரம்’ இசை வெளியீட்டில் தூய்மையையும் எளிமையையும் கற்றுக் கொடுத்தார் ஜாக்கிசான், ‘ஐ’ இசை வெளியீட்டு விழாவில் ‘காலம் தவறாமை’யை கற்றுக் கொடுத்திருக்கிறார் அர்னால்டு.

காலதாமதத்தைப் பற்றிக் கவலைப்படாமல் காத்திருக்க வைக்கும் திரை உலகினர் இனியாவது சரியான நேரத்தில் விழாக்களை தொடங்கி முடித்தால் இதுபோன்ற சங்கடங்கள் இனி நிகழ வாய்ப்பு இல்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தனர்.