Home இந்தியா போதை பொருள் கடத்தலில் ராணுவ அதிகாரி

போதை பொருள் கடத்தலில் ராணுவ அதிகாரி

523
0
SHARE
Ad

drugsஇம்பால், பிப்.25- மணிப்பூரில், 15 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில், ராணுவ அதிகாரி உட்பட, 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மணிப்பூர், சந்தல் மாவட்டத்தில் உள்ள, பல்லல் பகுதியில், காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு வந்த, மூன்று வாகனங்களை சோதனை செய்த போது, அதில், மியான்மரிலிருந்து கடத்திவரப்பட்ட, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக, ராணுவ மக்கள் தொடர்பு அலுவலர், அஜய் சவுத்திரி, அவரது உதவியாளர், பாப்லு மற்றும் பிரோஜென் திரோசிங் உட்பட, ஆறு பேரை  காவல் துறையினர் கைது செய்தனர்.