Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவில் வாட்ஸ் அப் பயனர்கள் 70 மில்லியனாக உயர்வு!  

இந்தியாவில் வாட்ஸ் அப் பயனர்கள் 70 மில்லியனாக உயர்வு!  

509
0
SHARE
Ad

whatsupபுது டெல்லி, நவம்பர் 3 – உலக அளவில் தகவல் பரிமாற்றம் செய்யப் பயன்படும் செயலிகளில் முன்னணியில் இருப்பது ‘வாட்ஸ் அப்’ (Whatsapp) ஆகும். ஆரம்பக் காலங்களில் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த செயலி, காலப்போக்கில் இளைஞர்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாகவே மாறிவிட்டது. குறிப்பாக தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தகத்தில், உலக அளவில் முக்கிய சந்தையாக விளங்கும் இந்தியாவில், வாட்ஸ் அப் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

தற்சமயம் இந்தியாவில், வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 70 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதனை அந்த நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் நீரஜ் அரோரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நீரஜ் அரோரா கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“உலக அளவில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 600 மில்லியனாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் வாட்ஸ் அப் பயனாளர்களின் எண்ணிக்கை 70 மில்லியன் ஆகும். இதன் மூலம் மொத்த பயனாளர்களில் சுமார் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் ஆவர்”

“ஆரம்பிக்கப்பட்ட 3 ஆண்டுகளில் வாட்ஸ் அப்பின் வளர்ச்சி உலக நிறுவனங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், உலகின் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக், கடந்த ஏப்ரல் மாதம் வாட்ஸ் அப்பை 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. இந்த வர்த்தகம் வாட்ஸ் அப்பிற்கு மகுடம் சேர்ப்பதாக அமைந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தகவல் பரிமாற்றத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்திய வாட்ஸ் அப்பில், மற்றொரு புதிய அம்சமாக ‘தொலைபேசி அழைப்புகள்’ (VoiceCall) வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது குறிப்பிடத்தக்கதாகும்