Home நிகழ்வுகள் ஸ்ரீ முருகன் நிலைய ஏற்பாட்டில் ‘நாளை நமதே 2013’ நிகழ்வு

ஸ்ரீ முருகன் நிலைய ஏற்பாட்டில் ‘நாளை நமதே 2013’ நிகழ்வு

634
0
SHARE
Ad

smcபுந்தோங் சுங்கை பாரி, பிப்.26- மலேசிய ஸ்ரீ முருகன் நிலைய ஏற்பாட்டில் பேரா மாநில அளவில் ‘நாளை நமதே 2013’ லட்சியத்தை நோக்கி ஒன்று கூடுதல் நிகழ்வு வரும் 3.3.2013 ஞாயிறு காலை 8.30 மணிக்கு புந்தோங் சுங்கை பாரி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வில் நமது இந்திய பிள்ளைகளின்  கல்வி எதிர்காலத்தைப் பற்றியும்  நமது சமுதாயத்தின் எதிர்கால லட்சியத்தை பற்றியும் கருத்துரைக்கப்படும்.

ஸ்ரீ முருகன் நிலைய இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் மு.தம்பிராஜா சிறப்பு வருகை புரிவார்.

#TamilSchoolmychoice

மேல் விவரங்களுக்கு க.நாச்சிமுத்து 012-5051959, 05-2530569, 05-2554176 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.