Home இந்தியா ரயில்வேயில் மாற்றுதிறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – பன்சால்

ரயில்வேயில் மாற்றுதிறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – பன்சால்

483
0
SHARE
Ad

pansalஇந்தியா, பிப்.27- நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே வரவு செலவு, நடப்பு ஆண்டில் ரயில்வே துறையில் இருக்கும் 1.52 லட்சம் காலி பணி இடங்கள் நிரப்பப்படுமென ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டிற்கான ரயில்வே நிதி நிலை அறிக்கை ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வரவு செலவில்  பல முக்கியமான அம்சங்கள் தெரிவிக்கபட்டிருக்கின்றன.

அதில் இந்த ஆண்டில் ரயில்வே துறையில் இருக்கும் 1.52 லட்ச காலி பணி இடங்கள் துரிதமாக நிரப்பப்படுமென்றும், அதில் சுமார் 47,000 காலி பணியிடங்கள் பிற்படுத்தபட்டோருக்கும், மாற்றுதிறனாளிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் பன்சால் தெரிவித்திருக்கிறார்.