Home இந்தியா சிங்கத்திற்கும் – கழுகும் இடையே நட்புறவு வலுப்பட வேண்டும் – ஜெர்மனி மோடி உரை!

சிங்கத்திற்கும் – கழுகும் இடையே நட்புறவு வலுப்பட வேண்டும் – ஜெர்மனி மோடி உரை!

590
0
SHARE
Ad

Indian Prime Minister Modi visits Berlinபெர்லின், ஏப்ரல் 15 – இந்தியா – ஜெர்மனி இடையேயான நட்புறவு வலுப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இரு நாட்டின் சின்னங்களான சிங்கமும்-கழுகும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

ஜெர்மனியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் பெர்லின் நகரில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது மோடி கூறியதாவது:

“பூமியில் அரசனாக இருக்கும் சிங்கமும் (இந்திய சின்னம்), வானில் அரசனாக திகழும் கழுகும் (ஜெர்மனியின் சின்னம்) வலுவான கூட்டாளியாக இருக்க வேண்டும் என நம்புகிறேன். இரு நாடுகள் இடையேயான உறவு புதிய உச்சத்தை தொட வேண்டும்”.

#TamilSchoolmychoice

Indian Prime Minister Modi visits Berlin“அதிவீன தொழில்நுட்பம் பற்றி யாராவது பேசினால், எனக்கு ஜெர்மனிதான் ஞாபகம் வரும். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை தொடங்கியுள்ள எங்களுக்கு ஜெர்மன் வலுவான ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும்”.

“இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கி விரைவில் நிறைவேற பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளேன்”.

Indian Prime Minister Modi visits Berlin“தீவிரவாதம் வேகமாக பரவி வருகிறது. இது உலகத்துக்கே சவாலாக உள்ளது. அணு ஆயுத பரவலுக்கு தடை விதிப்பது போல் இப்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும். தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் எங்கிருந்து வருகிறது என்பதை நாம் கண்டறிந்து தடுக்க வேண்டும்”.

“தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளை நாம் தனிமை படுத்த வேண்டும்.  ஐ.நா. பாதுகாப்பு ஆணையம் நிரந்தர இடம் கோரும் உரிமை ஜெர்மனிக்கும், இந்தியாவுக்கும் உள்ளது என நான் நம்புகிறேன். நமது உறுப்பினர் அந்தஸ்து உலகுக்கே பயனுள்ளதாக இருக்கும்” என மோடி கூறினார்.