Home இந்தியா பீகாரிலும் எதிரொலித்த நிலநடுக்கம் – 15 பேர் பலி! 

பீகாரிலும் எதிரொலித்த நிலநடுக்கம் – 15 பேர் பலி! 

500
0
SHARE
Ad

bihar2பாட்னா, ஏப்ரல் 25 – நேபாளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், இந்தியாவின் வட மாநிலங்களிலும் எதிரொலித்தது.குறிப்பாக பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

bihar1பீகாரில் நிலநடுக்கம் காரணமாக 15 பேர் பலியாகி உள்ளதாகவும், மேற்கு வங்காளத்தில் இருவர் பலியாகி உள்ளதாகவும் அம்மாநில வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், மீட்புப் பணிகளுக்காக மத்திய அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளில் 4 பேரிடர் மீட்புக் குழுக்களை அனுப்பி வைத்துள்ளது.