Home நிகழ்வுகள் 3ஆம் ஆண்டு தமிழ் காப்பக பேராளர் மாநாடு

3ஆம் ஆண்டு தமிழ் காப்பக பேராளர் மாநாடு

794
0
SHARE
Ad

suvai-lingam-sliderகோலாலம்பூர், மார்ச்.5- மலேசிய தமிழ்க் காப்பகத்தின் 3வது தேசியப் பேராளர் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை (10.3.2013) காலை 10 மணிக்கு விஸ்மா துன் சம்பந்தன், டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர்.சோமா அரங்கத்தில் தமிழ் காப்பகத்தின் தேசியத் தலைவர் சு.வை. லிங்கம் தலைமையில் நடைபெறும்.

ம.இ.கா-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாட்டின் சுகாதாரத்துறை முன்னாள் துணையமைச்சருமான டான்ஸ்ரீ டத்தோ க.குமரன் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவைப்பார்.

காப்பகத்தில் புதிய இணைப்பு உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ள விரும்புவோர் பதிவுக்கட்டணம் 10 வெள்ளியும், தேசிய இயக்கங்கள் ஆண்டுக்கு 100 வெள்ளியும், மாநில இயக்கங்கள் 50 வெள்ளியும், வட்டார இயக்கங்கள் 30 வெள்ளியும் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

மாநாடு தொடர்பாக விவரங்கள் பெற்றிட  கீழ்க்கண்ட எண்களின் மூலம் தொடர்புகொள்ளலாம்.

தேசியத் தலைவர் சு.வை. லிங்கம் –  019-6011569

பொதுச் செயலாளர் ரெ.சு.முத்தையா – 019-2460609.