Home கலை உலகம் மும்பையில் நடைபெறும் ஐபிஎல் போடியை காண ஷாருக் கானிற்கு அனுமதியில்லை!

மும்பையில் நடைபெறும் ஐபிஎல் போடியை காண ஷாருக் கானிற்கு அனுமதியில்லை!

439
0
SHARE
Ad

மும்பை, மே 12 – மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள மும்பை இண்டியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஐபிஎல்-8ன் லீக் போட்டியைக் காண கொல்கத்தா அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக் கான் அனுமதிக்கப்படமாட்டார் என தெரிகிறது.

2012-ல் மும்பை-கொல்கத்தா இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அப்போது ஷாருக் கானுக்கும், பாதுகாப்பு ஊழியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வான்கடே மைதான வளாகத்தில் நுழைய ஷாருக் கானுக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

இதனால் கடந்த இரு ஐ.பி.எல்,களில் மும்பையில் நடைபெற்ற ஆட்டங்களைக் காண ஷாருக்கான் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த முறையும் அவரை அனுமதிக்க மாட்டோம் என மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகி கூறுகையில், “அவருக்கு விதிக்கப்பட்ட தடை அமலில் உள்ளதால் அவர் இந்த முறையும் மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய முடியாது” என்றார்.