Home இந்தியா ஐபிஎல்-8: மும்பை அணிக்கு ரூ.15 கோடி – சென்னைக்கு ரூ.10 கோடி பரிசு!

ஐபிஎல்-8: மும்பை அணிக்கு ரூ.15 கோடி – சென்னைக்கு ரூ.10 கோடி பரிசு!

568
0
SHARE
Ad

iplகொல்கத்தா, மே 25 – கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி, மும்பை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, இந்த வருடமும் சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

8 தொடரில் 6 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி, 4 முறை பரிதாபமாக தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ.15 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ipl-dhoniபி.சி.சி.ஐ. செயலாளர் அனுராக் தாகூர் இந்த தொகையை வழங்க, மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெற்றுக்கொண்டார்.

இதேபோல் இரண்டாம் இடத்தைப் பிடித்த சென்னை அணிக்கு ரூ. 10 கோடி வழங்கப்பட்டது. இந்த தொகையை கேப்டன் தோனி பெற்றுக்கொண்டார்.

ipl brovoமேலும், அந்த போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ரூ.5 இலட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

அதேபோல், அதிக விக்கெட்டுகளை எடுத்த சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோவிற்கு ரூ.10 இலட்சம் வழங்கப்பட்டது.