Home உலகம் உலகம் முழுவதும் 6 கோடிப் பேர் அகதிகளாக உள்ளனர் – ஐ.நா அகதிகள் ஆணையம் தகவல்!

உலகம் முழுவதும் 6 கோடிப் பேர் அகதிகளாக உள்ளனர் – ஐ.நா அகதிகள் ஆணையம் தகவல்!

629
0
SHARE
Ad

arrestedஜெனிவா, ஜூன் 20 –  உலகம் முழுவதும் சுமார் 6 கோடி பேர் அகதிகளாக உள்ளனர். கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 83 லட்சம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர் என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து ஐ.நா அகதிகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“போர்கள், உள்நாட்டுக் கலவரம் உள்ளிட்ட காரணங்களால் அகதிகளின் எண்ணிக்கை மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி, உலகம் முழுவதும் சுமார் 6 கோடிப் பேர் அகதிகளாக உள்ளனர்”.

“கடந்த 2014-ஆம் ஆண்டில் மட்டும் 83 லட்சம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர். உலகம் முழுவதும் 122 பேரில் ஒருவர் அகதியாக உள்ளார்”.

#TamilSchoolmychoice

“இவ்வாறு உலகெங்கும் அகதிகளாக உள்ளவர்கள் ஒரு நாட்டில் இருந்தால், அது மக்கள் தொகையில் உலகின் 24-வது மிகப் பெரிய நாடாக இருக்கும்”.

refugees-camp21“உலகெங்கும் தற்போது 5.95 கோடிப் பேர் அகதிகளாக உள்ளனர். இதில் 1.95 கோடி பேர் அகதிகள், 3.82 கோடி பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்த அகதிகளாகவும், 18 லட்சம் பேர் அடைக்கலம் புகுந்தவர்களாக உள்ளனர். உலகெங்கும் உள்ள அகதிகளில் பாதிப் பேர் குழந்தைகள் என்ற அதிர்ச்சித் தகவலும் இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது”.

“உலகெங்கும் உள்ள 1.95 கோடி அகதிகளில் 51 லட்சம் பேர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள். அதற்கடுத்த நிலையில் சோமாலியா, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்” என்று ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு இறுதிவரை எடுக்கப்பட்ட கணக்கின்படி, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் 10,433 பேர் அகதிகளாகவும், 16,709 பேர் அடைக்கலம் கோரியும் விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவில் அகதிகளாக இருப்பதற்காக 1,99,937 பேரும், 5,074 பேர் அடைக்கலம் கோரியும் விண்ணப்பித்துள்ளனர்.