Home இந்தியா 7 பேரை விடுவிக்க ஆளுனர் காலம் தாழ்த்தக் கூடாது!- ஸ்டாலின்

7 பேரை விடுவிக்க ஆளுனர் காலம் தாழ்த்தக் கூடாது!- ஸ்டாலின்

552
0
SHARE
Ad

சென்னை: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் ஏழு பேரை விடுவிக்க காலம் தாழ்த்தாமல் முடிவு எடுக்குமாறு திமுக தலைவர் மு..ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

28 வருடங்களாக தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்கள் தலைமையிலான அமர்வு, தள்ளுபடி செய்திருப்பதை தாம் வரவேற்பதாகக் கூறி, திமுக சார்பிலும், ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பிலும் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி, மாண்புமிகு தமிழக ஆளுனர் அவர்களுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்து விட்டது. கடந்த எட்டு மாதங்களாக முக்கியமான அந்தத் தீரமானத்தின் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

அரசியல் சட்டப்பிரிவு 161-ன் கீழும், மனித நேய அடிப்படையிலும் முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றுள்ள மாண்புமிகு ஆளுனர் அவர்கள், அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது உரிய காலத்தில் உத்தரவு பிறப்பிக்காமல் தேவையில்லாமல் தாமதப்படுத்தி வருகிறார் என்பது மிகுந்த கவலை அளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு, உடனடியாக அந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக ஆளுனர் அவர்களை திமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் குறிப்பிட்டு, அவ்வாறு செய்யத் தவறினால் பிரச்சனை எழக்கூடும் என அவர் சுட்டிக் காட்டினார்.