திருவாரூர் – முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பற்றி அவதூறான வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவனின் உருவபொம்மையை அதிமுகவினர் எரித்தனர். திருவாரூர் பேருந்து நிலையம் முன்பு விடிய விடிய ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.