Home One Line P2 ஐஎஸ் தீவிரவாதிகள் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்படுவர்!

ஐஎஸ் தீவிரவாதிகள் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்படுவர்!

864
0
SHARE
Ad

அங்காரா: துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் நேற்று செவ்வாயன்று, அந்நாடு அனைத்து டாய்ஷ் போராளிகளையும் ஐரோப்பாவில் விடுவிக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தை அச்சுறுத்தியுள்ளார்.

சைப்ரஸின் மத்தியதரைக் கடல் நீரில் எரிவாயு தோண்டியதற்காக தனது நாட்டிற்கு பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முடிவு குறித்து துருக்கி அதிபர் கோபமடைந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டது.

டாய்ஷ் போராளிகளை துருக்கி அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் என்றும், அந்நாடுகள் இந்த நடவடிக்கையை நிராகரித்தாலும் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தடுப்புக்காவலில் உள்ள டாய்ஷ் போராளிகளுக்கு துருக்கி ஒரு தங்கும் விடுதி அல்ல என்று அவர் குறிப்பிட்டார். பயங்கரவாத அமைப்பில் இணைந்த தங்கள் குடிமக்களை திரும்ப அழைத்துச் செல்ல மறுப்பு தெரிவிக்கும் அனைத்து நாடுகளையும் அவர் விமர்சித்தார்.

கடந்த திங்களன்று, துருக்கி பல அமெரிக்க, டேனிஷ் மற்றும் ஜேர்மன் குடிமக்களை வெளியேற்றியதுடன், மேலும் ஏழு ஜேர்மனியர்கள், இரண்டு ஐரிஷ் மற்றும் 11 பிரெஞ்சுக்காரர்களை வெளியேற்றும் திட்டங்களை அறிவித்தது.