Home One Line P2 ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும்...

ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

1398
0
SHARE
Ad

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள ஷாட்நகரின் சத்தன்பள்ளி என்ற இடத்தில் ஒரு பெண் கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

காவல் துறை வட்டாரங்களின்படி, குற்றம் நடந்த இடத்தை புனரமைக்க, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சத்தன்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர்கள் தப்பி ஓட முயன்றதாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல் துறையினரிடமிருந்து ஆயுதங்களை பறித்து, சத்தன்பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியதாகவும், பதிலுக்கு காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இருப்பினும், துப்பாக்கிச் சூடு எவ்வாறு நடந்தது என்பது குறித்து சைபராபாட் காவல் துறை இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. விரைவில் காவல் துறையினர் விவரங்களை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் அவரது உடலை எரித்ததாகக் கூறப்படும் இடத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.