இம்மொழி சவாலை ஏற்றுக்கொண்டு, தரூர், ஆங்கிலம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் பன்மைவாதம் என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். தினமும் மூன்று மொழிகளில் ஒரு மொழியை டுவிட் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
மொழித் தடையை நிவர்த்தி செய்வதற்கும், வெவ்வேறு கலாச்சாரங்களை ஒன்றிணைப்பதற்கும், ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று முன்னதாக மோடி வலியுறுத்தியிருந்தார். நாடு முழுவதும் பேசப்படும் 10 முதல் 12 வெவ்வேறு மொழிகளில் ஒரு வார்த்தையை வெளியிடுமாறு பிரதமர் ஊடகங்களுக்கு பரிந்துரைத்தார்.
“எனக்கு ஒரு தாழ்மையான ஆலோசனை உள்ளது. நம்மை ஒன்றிணைக்க மொழியின் சக்தியைப் பயன்படுத்துவோமா? ஊடகங்கள் இதற்கான பாலமாகவும், வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்களை நெருக்கமாகக் கொண்டுவரவும் முடியுமா? நாடு முழுவதும், 10-12 வெவ்வேறு மொழிகளில் பேசப்படும் ஒரு வார்த்தையை வெளியிடுவதன் மூலம் தொடங்கலாம்” என்று நரேந்திர மோடி கொச்சியில் தெரிவித்திருந்தார்.