

சென்னை – 5-ஆம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத் தமிழ் வம்சாவளியினர் ஒன்றுகூடல்-வணிகப் பரிமாற்றம் (பிஸினஸ் டூ பிஸினஸ்) தமிழ்நாட்டின் சென்னையில் 2019-ஆம் ஆண்டு ஜனவரி 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியில் பாரம்பரிய கலை கலாச்சாரம், இசைத்திருவிழா, ஆடைத் திருவிழா, வணிக சந்திப்புகள் போன்ற அங்கங்கள் இடம் பெற உள்ளன.
அவ்விழாவில் தமிழ் ஆர்வலர்கள் தமிழரின் வரலாறுகளை ஆவணப்படுத்தும் விதமாக விழா மலரும் இணைய மலரும் வெளியீடு காண உள்ளன. மேலும் உலகத் தமிழர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் உலகம் எங்கிலும் இருந்து கலந்துகொள்ள உள்ளனர்.
மேலும் கவியரங்கத்தில் அனைத்து நாட்டு பிரதிநிதிகள் பங்கு பெறவும் உலகத் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒருங்கிணையவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் தமிழர்கள் புதிய அத்தியாயத்தை உருவாக்குவார்கள் என உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.