Home One Line P1 1எம்டிபி வழக்குகளில் ஸ்ரீ ராமை தகுதி நீக்கம் செய்யும் முயற்சியில் நஜிப் மீண்டும் தோல்வி!

1எம்டிபி வழக்குகளில் ஸ்ரீ ராமை தகுதி நீக்கம் செய்யும் முயற்சியில் நஜிப் மீண்டும் தோல்வி!

644
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மூன்றாவது முறையாக முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீ ராம் தனது 1எம்டிபி வழக்குகளில் தலைமை அரசாங்க வழக்கறிஞராக பிரதிநிதிக்கக்கூடாது எனும் நஜிப் ரசாக்கின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராம் தனது மூன்று வழக்குகளில் அரசு தரப்பில் இருந்து வெளியேற்ற முன்னாள் பிரதமரின் விண்ணப்பம் தொடர்பாக ஏகமனதாக கூட்டரசு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இது வெளியிடப்பட்டது.

நஜிப்பின் 2.28 பில்லியன் ரிங்கிட் 1எம்டிபி வழக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்ரா முன்னிலையில் வருகிற ஆகஸ்ட் 219-ஆம் தேதியன்று விசாரணைக்கு வர உள்ளது.