Home One Line P1 ஜம்மூ- காஷ்மீர் குறித்த விரிவான விளக்கத்தை மோடி அறிவிக்க உள்ளார்!

ஜம்மூ- காஷ்மீர் குறித்த விரிவான விளக்கத்தை மோடி அறிவிக்க உள்ளார்!

474
0
SHARE
Ad

புது டில்லி: ஜம்மு- காஷ்மீர் விவகாரம் குறித்து விரிவான தமது விளக்கத்தை, இன்று வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு (இந்திய நேரப்படி) அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார்

ஜம்முகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டதன் காரணம் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது பற்றியும் அவர் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

முன்னதாக, கடந்த மார்ச் 27-ஆம் தேதி மக்களவை தேர்தலின் போது மக்களிடம் உரை நிகழ்த்திய மோடி ஏசாட் ஏவுகணை மூலம் விண்வெளியில் உளவு பார்த்த செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தார்

இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மோடி தலைமையிலான அரசு, அண்மையில் முத்தலாக் தடை மசோதா, என்ஐஏ மசோதா, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்து உள்ளிட்ட முக்கிய மதோசாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 15-ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரை நிகழ்த்தவும் மோடி திட்டமிட்டுள்ளார்.