Home One Line P1 உலக அளவில் ஒரு மாத இடைவெளியில் அதிக புள்ளிகளைப் பெற்ற அணியாக ஹாரிமாவ் மலாயா திகழ்கிறது!

உலக அளவில் ஒரு மாத இடைவெளியில் அதிக புள்ளிகளைப் பெற்ற அணியாக ஹாரிமாவ் மலாயா திகழ்கிறது!

517
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2022-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தகுதி மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை விளையாட்டுகளின் வெற்றிகளைத் தொடர்ந்து, ஒரு மாதத்தில் 31 புள்ளிகளைப் பெற்று பிபா உலக தரவரிசையில், ஹாரிமாவ் மலாயா 154-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த மாதம் 158-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆண்டு அக்டோபர் 24 முதல் நவம்பர் 28 வரை உலகிலேயே அதிக புள்ளிகளைப் பெற்ற அணியாகவும் மலேசியா திகழ்கிறது.

நவம்பர் 14-ஆம் தேதி தாய்லாந்தையும், நவம்பர் 19-ஆம் தேதி இந்தோனிசியாவையும் 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியதன் பின்னர் உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் மலேசியா சிறந்த செயல்திறனைக் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

தலைமை பயிற்சியாளர் டான் செங் ஹோவின் வழிகாட்டுதலின் கீழ், நவம்பர் 9-ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் நடந்த நட்பு ஆட்டத்தில் தஜிகிஸ்தானை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பின்னர் ஹாரிமாவ் மலாயா அணி  உலக தரவரிசையில் 3.24 புள்ளியைச் சேர்த்தது.

தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் அணிகளான, பெல்ஜியம், பிரான்ஸ், பிரேசில், இங்கிலாந்து மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.