Home One Line P1 ஜோகூரில் அம்னோ, பெர்சாத்து பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன

ஜோகூரில் அம்னோ, பெர்சாத்து பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன

562
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: பிரதமர் மொகிதின் யாசின் இன்று புத்ராஜெயாவில் ஜோகூர் தேசிய கூட்டணி தலைவர்களை சந்தித்தார்.

ஜோகூர் பெர்சாத்து தலைவர் மஸ்லான் புஜாங் கருத்துப்படி, கட்சிக்கும் அம்னோவிற்கும் இடையிலான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

“அது முடிந்துவிட்டது” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

ஆதாரங்களின்படி, மஸ்லானைத் தவிர, கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களில் ஜோகூர் முதலமைச்சர் ஹாஸ்னி முகமட் மற்றும் இரண்டு முன்னாள் பதவிகளில் இருந்த உஸ்மான் சாபியன் மற்றும் சாஹாருடின் ஜாமால் ஆகியோர் அடங்குவர்.

அரசாங்க துணை நிறுவனங்கள் (ஜிஎல்சி) மற்றும் உள்ளூர் அரசாங்கங்களின் நியமனங்களுக்கு அம்னோ தங்களை புறக்கணிப்பதாக பெர்சாத்து முன்பு கூறியிருந்தது.