Home One Line P1 டிஎன்பி மின்சாரக் கட்டணத் தள்ளுபடியை மறு மதிப்பீடு செய்ய வேண்டும்

டிஎன்பி மின்சாரக் கட்டணத் தள்ளுபடியை மறு மதிப்பீடு செய்ய வேண்டும்

749
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது பயனீட்டாளர்களுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணத் தள்ளுபடியை மறு மதிப்பீடு செய்ய தெனாகா நேஷனல் பெர்ஹாட்டுக்கு கியூபெக்ஸ் வலியுறுத்தியுள்ளது.

தெனாகா நேஷனல் அந்தந்த பயனீடு அடிப்படையில் பயனர்களுக்கு 50 விழுக்காடு, 25 விழுக்காடு , 15 விழுக்காடு மற்றும் இரண்டு விழுக்காடு தள்ளுபடியை வழங்கியுள்ளது. இருப்பினும், அவை குறைந்த பயனீடு உள்ள வீடுகளுக்கு மட்டுமே இந்த தள்ளுபடியிலிருந்து அதிக நன்மை கிடைக்கும் என்றும் அதன் தலைவர் அட்னான் மாட் தெரிவித்தார்.

“தகுதி வாய்ந்த ஒரு சிலர் மட்டுமே அதிகபட்ச தள்ளுபடி வீதத்தை அனுபவிக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் தங்கள் நேரத்தை வீட்டிலேயே செலவிடுகிறார்கள்.

#TamilSchoolmychoice

“எங்கள் கருத்துப்படி, தள்ளுபடி விகிதம் மொத்த மசோதாவிலிருந்து 25 முதல் 50 விழுக்காடு வரை இருக்க வேண்டும், இது பயனீடு அளவைக் கருத்தில் கொள்ளாமல் இருக்க வேண்டும்.” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அட்னானின் கூற்றுப்படி, தற்போதைய சூழ்நிலையில் அனைத்து தரப்பினருக்கும் இந்த முயற்சி உதவக்கூடும், ஏனெனில்கொவிட்-19 பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் போது வேலை மற்றும் வருமான ஆதாரத்தை இழந்த பலர் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.