Home நாடு அரசு ஊழியர்கள் நம்பகமானவர்கள் அல்ல என்ற தோற்றத்தை ஹாடி ஏற்படுத்துகிறார்!

அரசு ஊழியர்கள் நம்பகமானவர்கள் அல்ல என்ற தோற்றத்தை ஹாடி ஏற்படுத்துகிறார்!

562
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அரசு ஊழியர்களை அவதூறாக பேசியது குறித்து பொது சேவை சங்கம் (கியூபேக்ஸ்)  விமர்சித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஆதரித்த கட்சியைச் சேர்ந்த அரசாங்கத்திற்கு வேலை செய்ய சங்கடமாக இருந்தால் பதவி விலகலாம் என்று ஹாடி அவாங் முன்னதாக கோரினார்.

நாட்டில் அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில் நம்பகமானவர்கள் அல்ல என்ற தோற்றத்தை ஹாடியின் கூற்று இருப்பதாக கியூபேக்ஸ் தலைவர் அட்னான் மாட் தெரிவித்தார்.

“தற்போதைய அரசாங்கத்துடன் வசதியாக இல்லாத அரசு ஊழியர்களை பதவி விலக அழைப்பு விடுத்தது, அரசு ஊழியர்கள் மக்களுக்கும் நாட்டிற்கும் தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில் நம்பகமானவர்கள் அல்ல என்ற தோற்றத்தை அளிக்கிறது.

#TamilSchoolmychoice

“கொவிட் -19 தொற்றுநோயின் சவாலை எதிர்கொள்வதில் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்தும்போது அரசு ஊழியர்களின் தொழில் திறனை இணைத்துப் பேச முயற்சிப்பது பொருத்தமற்றது என்று கியூபேக்ஸ் கருதுகிறது,” என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

அரசாங்கமும் உயர் தலைமையும் மாறினாலும், மக்கள் மற்றும் நாட்டின் நன்மைக்காக முடிவெடுக்கும் ஒவ்வொரு கொள்கையையும் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்கள் விசுவாசமாக இருந்தனர் என்று அவர் கூறினார்.

“ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் தனது சொந்த சித்தாந்தமும் அரசியல் கருத்துக்களும் இருக்கும்போது, ​​அரசு ஊழியர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் பாரபட்சமற்றவர்கள் என்றும், அவர்கள் பொது நலனை வேறுபடுத்த முடியும் என்றும் கியூபேக்ஸ் நம்புகிறது, உறுதியளிக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.