Home One Line P1 ‘விலக வேண்டிய நேரம் இது’- சைட் சாதிக்

‘விலக வேண்டிய நேரம் இது’- சைட் சாதிக்

423
0
SHARE
Ad

கோலாலம்பூர்: “செல்ல வேண்டிய நேரம் இது,” என்று முன்னாள் பெர்சாத்து இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தனது சேவைகள் இனி தேவைப்படாதபோது, ​​அவர் வெளியேற வேண்டிய நேரம் இது என்று அப்பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கட்சியை எடுத்துக் கொள்ள வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். எனது உறுப்பியதை நீக்க விரும்பினால், அதை நீக்கிவிடுங்கள். உங்கள் முயற்சிகளை நான் தாமதிக்க மாட்டேன்.

#TamilSchoolmychoice

“பெர்சாத்துவில் எனது உறுப்பியம் நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கையும் நான் திரும்பப் பெறுவேன்.” என்று அவர் கூறியிருந்தார்.

மே 28 அன்று சைட் சாதிக் உறுப்பியம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பெர்சாத்து துணைத் தலைவர் முகமட் ஐசாத் ரோஸ்லானை தலைவர் பதவில் நியமித்ததை இளைஞர் பிரிவு நேற்று அறிவித்திருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த மூவார் நாடாளுமன்ற உறுப்பினரான சைட் சாதிக், அரசியல் கட்சி, நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கான ஒரு ‘வாகனம்’, தனிநபரின் நலனுக்காகவும் ஆடம்பரத்துக்காகவும் அல்ல என்று குறிப்பிட்டார்.

“இந்த பாதை எளிதானது அல்ல என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதே பாதையில் செல்வோருக்கும் அதே கதி கிடைக்கும். ” என்று அவர் கூறினார்.

இருப்பினும், இளைஞர் பிரிவில் இருந்த போது ஏற்படுத்தப்பட்ட உறவு துண்டிக்கப்படாது என்று அவர் கூறினார்.