Home One Line P1 அமலாக்கத் துறை நேர்மை ஆணையத்தில் 3 பேர் நியமனம்

அமலாக்கத் துறை நேர்மை ஆணையத்தில் 3 பேர் நியமனம்

406
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அமலாக்கத் துறை நேர்மை ஆணையத்தில் (ஈ.ஏ.ஐ.சி) மேலும் மூன்று உறுப்பினர்களை அரசாங்கம் நியமித்துள்ளது.

அவர்கள் மூவரும் முன்னாள் மூத்த அரசாங்க அதிகாரிகளான, மஹ்மூட் அடாம் மற்றும் இரண்டு முன்னாள் மத்திய நீதிமன்ற நீதிபதிகள், அசியா அலி மற்றும் அலிசதுல் கைர் ஓத்மான் கைருடின் ஆவர்.

அவர்களின் நியமனம் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.

#TamilSchoolmychoice

அவர்களுடன் முன்னாள் மூத்த அதிகாரி சிடெக் ஹசான் (தலைவர்), முன்னாள் மத்திய நீதிமன்ற நீதிபதி சைய்னுன் அலி (துணைத் தலைவர்), முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் லூயிஸ் ஓஹாரா மற்றும் முன்னாள் சட்ட பேராசிரியர் நிக் அகமட் கமல் நிக் மஹ்மோட் ஆகியோர் இணைவார்கள்.

முந்தைய ஈ.ஏ.ஐ.சி குழு கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டது.

அனைத்து அமலாக்கத் துறைகளும் சம்பந்தப்பட்ட புகார்களைப் பெற 2009- இல் ஈ.ஏ.ஐ.சி நிறுவப்பட்டது.