

கோலாலம்பூர் : மஇகாவின் இளைஞர், மகளிர், புத்ரா, புத்திரி பிரிவுகளுக்கான பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) மஇகா தலைமையகத்தில் நடைபெற்றது.
வேட்புமனுத் தாக்கலில் மஇகா புத்திரி பிரிவின் தலைவியாக 34 வயது ஷாலினி ராஜாராம் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் வேட்புமனுத் தாக்கலுக்கான பொறுப்பாளராகப் பணியாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் மஇகா புத்திரி தலைவி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை அறிவித்தார்.
மஇகா புத்திரி தலைவியாக இதுநாள்வரை பணியாற்றிய சி.எம்.ஹேமலதாவுக்குப் பதிலாக புதிய தலைவியாக ஷாலினி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
மஇகா புத்ரா தலைவராக கிஷ்வா தேர்வு
இதுவரையில் புத்ரா பிரிவின் தலைவராக இருந்து வந்த எஸ்.பத்மராஜாவுக்குப் பதிலாக கிஷ்வா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
போட்டியிருக்கும் புத்ரா, புத்திரி பிரிவினரின் மற்ற பதவிகளுக்கு எதிர்வரும் அக்டோபர் 30-ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.
மஇகாவின் தேசிய நிலையிலான பதவிகளுக்கு எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறும். அதற்கான தேர்தல்கள் எதிர்வரும் நவம்பர் 26-ஆம் தேதி நடைபெறும்.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal