Home நாடு மொகிதின் யாசின் மருமகன் முகமட் அட்லான் மீது ‘ரெட் நோட்டீஸ்’ – காவல் துறை சமர்ப்பித்தது

மொகிதின் யாசின் மருமகன் முகமட் அட்லான் மீது ‘ரெட் நோட்டீஸ்’ – காவல் துறை சமர்ப்பித்தது

379
0
SHARE
Ad
முகமட் அட்லான் பெர்ஹான்

கோலாலம்பூர் : பெரிக்காத்தான் நேஷனல் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மருமகன் முகமட் அட்லான் பெர்ஹான் மீது ரெட் நோட்டீஸ் என்னும் சிவப்பு எச்சரிக்கை முன்னறிவிப்பு இண்டர்போல் என்னும் அனைத்துலக காவல் துறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை காவல் துறை தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் அறிவித்தார்.

அவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரணைக்காக தேடப்பட்டு வருகிறார்.

அவரைத் தேடிக் கண்டுபிடிக்க பிரான்சில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இண்டர்போல் என்னும் அனைத்துலகக் காவல் துறையின் உதவி நாடப்படும் என ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

48 வயதான முகமட் அட்லான் மொகிதின் யாசினின் இரண்டாவது மகளை திருமணம் புரிந்தவர் ஆவார். அவருடன் சேர்த்து மன்சூர் சாட் என்ற 69 வயது நபரும் தேடப்படுகிறார்.

முகமட் அட்லான் விசாரணைக்காக தேடப்படுவதாகவும் தற்போது வெளிநாட்டில் தங்கியிருப்பதாகவும் ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி அறிவித்தது. சிவப்பு எச்சரிக்கை இண்டர்போல் அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டால் அதன்பிறகு முகமட் அட்லான் மற்ற நாடுகளுக்குப் பயணம் செய்வது தடை செய்யப்படும்.