Home நிகழ்வுகள் அனைத்துலக இந்திய விற்பனை பெருவிழாவில் வர்ணம் தீட்டும் போட்டி

அனைத்துலக இந்திய விற்பனை பெருவிழாவில் வர்ணம் தீட்டும் போட்டி

709
0
SHARE
Ad

colouring-penselஜோகூர், பிப்.8- ஜோகூர் மாநிலத்தில் மூன்றாவது முறையாக நடைபெறவிருக்கும் அனைத்துலக இந்திய பெருவிழா, ‘டங்கா சிட்டிமால்’- இல் பிரமாண்டமாக ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

இந்த அனைத்துலக இந்திய விற்பனை பெருவிழா இன்று பிப்ரவரி 8 தொடங்கி பிப்ரவரி 12ஆம் தெதிவரை டங்கா சிட்டிமாலில் நடைப்பெறவுள்ளது.

இந்த விற்பனை பெருவிழாவில் தேவையான பொருட்களை நாம் வாங்குவதோடு மட்டுமல்லாமல் நமது பொழுதை சிறப்பாகச் செலவிட பல நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

#TamilSchoolmychoice

குறிப்பாக, பள்ளி விடுமுறையை முன்னிட்டு சிறுவர்கள் தங்கள் பொழுதைக் கொண்டாடி மகிழ அருமையான சூழ்நிலையை இந்த அனைத்துலக இந்திய விற்பனை பெருவிழா ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது.

அவ்வகையில் 5 முதல் 12  வயது வரை நிரம்பிய சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

இந்த வர்ணம் தீட்டும் போட்டி இன்று தொடங்கி  பிப்ரவரி 11ஆம் தேதி வரை,  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.

இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் சிறுவர்கள் வரும் போது பென்சில் வர்ணங்களை கையோடு கொண்டுவர வேண்டும்.

சிறப்பாக வர்ணம் தீட்டும் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.