Home வாழ் நலம் வாயுக்களை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும் ரோஜா பூ!

வாயுக்களை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும் ரோஜா பூ!

3040
0
SHARE
Ad

roses-4eசெப்டம்பர் 9 – ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுடையது. ரோஜா இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டவை. ரோஜா இதழ்களை சாப்பிட்டால் வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும்.

ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர்விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அதில் பாதியை சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலச்சிக்கல் விலகும். நீர்கட்டு உடையும், மூலச்சூடு தணியும்.

ரோஜா மொட்டுகளில் ஒரு கை அளவு எடுத்துக்கொண்டு அதை அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியான தயிரில் போட்டுக் கலக்கி, காலை வேளையில் மட்டும் குடித்து வர வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

#TamilSchoolmychoice

pink-rose-flower-hd-desktop-wallpaperபித்தம் காரணமாக கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி மற்றும் பித்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு,

இரண்டு  டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும் தேவையான அளவு சர்க்கரை  சேர்த்துக் கலக்கி குடிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் அறவே நீங்கிவிடும்.

ஆய்ந்து எடுத்த ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு 150 கிராம் சுத்தமான தேனை அதில்விட்டு நன்றாக கிளறி வெயிலில் வைத்து விட வேண்டும்.

தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி மாலையில் ஒரு தேக்கரண்டி சாப்பிடவேண்டும். காலையில் வெயிலில் வைத்து மாலையில் எடுத்து வைத்துவிடவேண்டும்.

roseஇதை இரத்தபேதி நிற்கும் வரை சாப்பிடவேண்டும். இதை தயாரிக்க சிரமமாக தோன்றினால் தமிழ் மருந்துக்கடைகளில் குல்கந்து என்று கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கி இதே அளவு சாப்பிட்டு வரவேண்டும்.

ஒரு சிலருக்கு அடிக்கடி தும்மல் வரும். இதை நிறுத்த ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை பாத்திரத்தில் போட்டு அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டு சுண்டக்காய்ச்சி அந்த தண்ணீரை இறுத்து காட்டுச்சீரகத்தில் ஒரு தேக்கரண்டி அளவு அரைத்து ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டு வந்தால் தும்மல் நிற்கும்.