Home இந்தியா மீசாட்-3பி மலேசியாவின் அதி நவீன செயற்கைக்கோள்!

மீசாட்-3பி மலேசியாவின் அதி நவீன செயற்கைக்கோள்!

584
0
SHARE
Ad

imagesகோலாலம்பூர், செப்டம்பர் 12 – நாட்டின் அதிநவீன செயற்கைக்கோளாக கருதப்படும் மீசேட்-3பி, இன்று காலை சரியாக 6.05 மணிக்கு பிரெஞ்சு கயானாவின் உள்ள கயானா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. முதல் மூன்று முறை ஏற்பட்ட சிறிய தாமதங்கள் காரணமாக சற்றே பதட்டமான சூழல் நிலவினாலும், இறுதியாக செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்ததும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட மீசாட்-3பி கனவுத் திட்டம், சுமார் மூன்றாண்டு கால கடின முயற்சிகளுக்கு பிறகு வெற்றிகரமாக முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மீசாட் -3பி பற்றி மீசேட் செயற்கைக்கோள் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பால் பிரௌன் கென்யான் கூறுகையில், “மீசாட் விண்ணில் ஏவிய மீசாட்-3பி, மலேசியாவின் அதி நவீன செயற்கைக்கோள் ஆகும்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த புதிய செயற்கைக்கோள் ஆனது மீசாட் (MEASAT) மற்றும்  ‘அரியான்பேஸ்’  (Arianespace) ஆராய்ச்சிக் குழுவின் கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மலேசியா விண்ணில் ஏவிய மீசாட் 1, 2 மற்றும் 3-ஐ காட்டிலும் மீசாட்-3பி மிகப் பெரியதும், நவீனத்துவம் மிக்கதுமாக கருதப்படுகின்றது.

மீசாட் -3பி செயற்கைக்கோள் மூலமாக ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் ஊடகத் தொடர்பு மற்றும் ஒளி பரப்பு சேவைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.