Home நாடு வீடுகளின் விலை உயரலாம்; கோடி காட்டுகிறது பேங்க் நெகாரா

வீடுகளின் விலை உயரலாம்; கோடி காட்டுகிறது பேங்க் நெகாரா

636
0
SHARE
Ad

imagesகோலாலம்பூர், மார்ச்.21-  அதிகமான வீடுகள் கட்டப்பட்டு  வந்தாலும் ஆண்டுக்கு ஆண்டு வீடுகளின் விலை அதிகரித்து வருகிறது. 2011 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2012ஆம் ஆண்டு வீட்டின் விலை அதிகரித்துள்ளது. அடுத்த  சில ஆண்டுகளுக்கு வீட்டு விலை அதிகரிப்பு தொடரும் என்று பேங்க் நெகாரா கோடி காட்டியுள்ளது.

அதிகமான புது வீடுகள் கட்டப்பட்டு வந்தாலும் பினாங்கு, கோலாலம்பூர், சிலாங்கூர் ஆகிய இடங்களில் கட்டப்படும் வீடுகள் அனைத்துத் தரப்பினராலும் வாங்க முடியாத விலையில் இருக்கிறது.

அவ்வாறு அனைத்து தரப்பினராலும் வாங்கக் கூடிய விலையில் போதுமான வீடுகள் கட்டப்படாதது  இரண்டாம் நிலை சொத்துச் சந்தையில் விலைகள் உயரக் காரணமாகும்.

#TamilSchoolmychoice

மேலும் அடுத்தாண்டு வீடுகள் வாங்க பலர் ஆர்வம் கொண்டிருப்பதால் வீட்டின் விலை உயரலாம் என்றும் பேங்க் நெகாரா கோடி காட்டுள்ளது.