நேற்று வியாழக்கிழமை,ஹோலண்ட் வில்லேஜ் என்ற பகுதியில் அமைந்துள்ள ஸ்டாண்டர்டு சார்டெர்ட் வங்கியின் கிளை ஒன்றில் நுழைந்த அந்நபர், அங்கிருந்த அதிகாரிகளிடம் துண்டு காகிதத்தில் எதையோ எழுதிக் கொடுத்து, சற்று நேரத்தில் அங்கிருந்து 30,000 டாலர் பணத்துடன் வெளியேறியிருக்கிறார்.
அவர் கையில் எந்த ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்று காவல்துறைத் தெரிவித்துள்ளது.
என்றாலும், அந்தக் காகிதத்தில் அவர் என்ன எழுதிக் கொடுத்தார் என்பதை காவல்துறை வெளியிடவில்லை.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவரை இது தொடர்பாக காவல்துறை தேடி வருகின்றது.