“இந்நாட்டிலுள்ள இந்து ஆலயங்கள் ஆகம முறைப்படி வழிநடத்தப்பட வேண்டும். எதிர்காலங்ளில் சிறப்பான அளவில் அவற்றை வழி நடத்த சில முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்” என டாக்டர் சுப்ரா தனது திறப்புரையில் கேட்டுக் கொண்டார்.
இந்து ஆலயங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய அம்சங்களாக பின்வரும் சில அம்சங்களை டாக்டர் சுப்ரா குறிப்பிட்டார்:-
- இந்து ஆலயங்களை வழிநடத்தும் பொறுப்பும், அதனைக் தற்காக்கும் உரிமையும் இந்துக்களுக்கு உள்ளது என்பதை ஒவ்வோர் இந்துவும் உணர வேண்டும்;
- ஆலய நிர்வாகங்கள் நாட்டின் சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும்.
- ஆலயங்கள் முறையாகச் சமயப் பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டும்;
- ஆலயங்கள் சமூக, சமுதாயத் தொண்டு செய்வது குறித்து ஆராய வேண்டும்;
- ஆலய நிர்வாகங்கள் காலத் தேவைக்கு ஏற்ப நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து ஆராய வேண்டும்;
- இந்து ஆலயங்களில் சமூக, சமுதாய சேவை மையங்களை உருவாக்க வேண்டும்.
ஆலயங்களுக்கான தேசிய மாநாட்டில் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம். சரவணன், மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ ஆர். எஸ். மோகன், மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ அ. வைத்தியலிங்கம், ஆகியோருடன் நாடு முழுமையிலுமிருந்து ஆலயப் பிரதிநிதிகளும் திரளாகக் கலந்து கொண்டனர்.