அதே வேளையில் தொற்று பீடித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 1 இலட்சத்தைக் கடந்து 119,814 என பதிவாகியது.
மேலும் 908 பேர் நாடு முழுவதிலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 459 பேர் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றைய ஒருநாள் மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,866 ஆக உயர்ந்தது.
ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 12,528
மொத்தம் பதிவான 12,528 தொற்று சம்பவங்களில் 12,509 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 19 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 6,629– ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 779,171 -ஆக உயர்ந்திருக்கிறது.
மாநிலங்களைப் பொறுத்தவரையில் முதல் இடத்தில் வழக்கம்போல் சிலாங்கூர் இருக்கிறது. 4,985 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்திருக்கிறது.
சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் 1,740 தொற்றுகளோடு கோலாலம்பூர் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
நெகிரி செம்பிலான் 1,280 தொற்றுகளோடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது.