உள்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்றும் தலைமைக்கு தெரிவித்திருக்கிறேன். தேர்வு குழு தலைவர் குலாம் நபி ஆசாத், பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் போன்றோரிடம் மீண்டும் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளேன்.
தொடர்ந்து ஒருவரே தொகுதியில் போட்டியிடுவதற்கு பதிலாக புதியவர்கள், தொண்டர்கள் என்றால் மக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். அவர்களே வேட்பாளர்களாக அந்தந்த தொகுதியில் நியமனம் பெற வேண்டும் என்ற என் விருப்பத்தை தலைமையிடம் தெரிவித்துள்ளேன்.
தலைமை தேர்வு செய்யும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்வேன் என தங்கபாலு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க எந்த ஒரு கட்சியும் தயாராக இல்லாத நிலையில் ஏற்கெனவே ஜி.கே.வாசன் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் கே.வி. தங்கபாலுவும் போட்டியிடமாட்டேன் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.